நீண்ட நாள் ஆசை..........................மொபைல் பற்றிய பதிவு.
தமிழில் கையடக்க தொலைபேசி பற்றிய வலைப்பதிவிட நீண்ட நாள் ஆசை.அது இப்போது நிறைவேற உள்ளதை இட்டு பெருமிதம் கொள்கிறேன்.
மனித வாழ்கையில் தகவல் தொடர்பு இன்றியமையாதது.பண்டைய மனிதன் முதல் நவீன கால மனிதன் வரை தகவல் தொடர்பு பரிமாரப்பட்டுக்கொண்டிருக்கிறது.பண்டைய கால மனிதன் குகை ஓவியங்கள்,வரையப்பட்ட வரைபடங்கள்,எழுத்து,மலைமேல் தீமூட்டுதல்,பறை வாசித்தல்,புறா மூலம் தூதனுப்புதல்,போன்ற யுக்திகளை கையாண்டான்.இது பின்னர் பரிணாம வளர்ச்சி காரணமாக மேலும் ஓங்கி வளர்ந்தது.
இந்தப் பரிணாம வளர்ச்சி அலெக்ஸ்சாண்டர் கிரகம்பெல் இன் முயற்சியோடு நிலையான தொலைபேசியாக உருமாற்றம் பெற்றது.இந்த வளர்ச்சி படிப்படியாக முன்னேறி தற்போது கையடக்க தொலை பேசியாக வளர்ந்துள்ளது.
ஆரம்பத்தில் அழைப்பு மற்றும் குருங்க்செய்திகளுக்கு பயன்பட்ட கைத்தொலைபேசியானது தற்போது பல்வேறு இயங்கு தளங்களுடன் பலதரப்பட்ட சேவைகளுக்காக பயன்படுகிறது.தற்போதுள்ள SYMBIAN இயங்கு தளம் கொண்ட கைத்தொலைபேசியில் விண்டோஸ் இயங்குகிறது என்றால் கூட ஆச்சரியமில்லை.ஆனால் நம்மில் பல பேருக்கு இவற்றை எப்படி செயற்படுத்துவது என்று தெரியாது.இவ்வாறான குறைகளை நான் இத்தளத்தின் மூலம் நிறைவு செய்ய ஆசைப்படுகிறேன்.
உங்கள் நண்பன்
ABDULLAHAZAM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக